மாலைதீவில் பட்டப்பகலில் அமைச்சரை கத்தியால் குத்தியவரால் பரபரப்பு(காணொலி)
பட்டப்பகலில் வீதியில் அமைச்சர் மீது கத்திக்குத்து
மாலைதீவில் தனது பணிக்கு சென்று கொண்டிருந்த அந்நாட்டு அமைச்சரை ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே மீதே இந்த தாக்குதல் சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வழக்கம் போல பணிக்கு சென்ற அமைச்சர்
அமைச்சர்,வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத நேரத்தில் அமைச்சரை கத்தியால் தாக்க முற்பட்டார்.உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் அலி சோலே, தாக்குதலை தடுக்க முயன்றார்.
#Maldives Minister #Ali_Solih stabbed near Male, reported that the perpetrator recited some verses of the #Quran before attack on Solih’s neck. pic.twitter.com/WEQRDoIXE5
— durgesh saini (@durgeshsaini3) August 24, 2022
இருந்தபோதிலும் அவரது கழுத்து மற்றும் முகத்தில் கத்திகுத்து ஏற்பட்டது. பின்னர் வாகனத்தை அப்படியே போட்டுவிட்டுஅமைச்சர் அலி அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவர்களையும், அந்த நபர் கத்தியால் தாக்க முயற்சித்தால் அங்கு பதற்றம் நிலவியது.
விரைந்து வந்த காவல்துறையினர்
பின்னர் தகவலறிந்து நிகழ்விடத்திற்குவிரைந்து வந்த மாலைதீவு காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரைசுற்றி வளைத்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.
தாக்கியவர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்துமாலே காவல்துறையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலேவில் உள்ள மருத்துவமனையில் அமைச்சர் அலி சோலேவுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில், மாலத்தீவில் அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.