அநாகரிகமான முறையில் இரு இளம் பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற கும்பல் - நெஞ்சைப் பதறவைக்கும் வன்கொடுமை
மணிப்பூர் - கங்போக்பி மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்வது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அந்தப் பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பழங்குடியின அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தீவிர விசாரணை
இந்தக் கொடூரம் மே மாதம் 4ஆம் திகதி நடந்தேறிய நிலையில், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணுமாறு மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் 3 ஆம் திகதி வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3ஆம் திகதி வன்முறை வெடித்த நிலையில், அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
*All out effort to arrest culprits as regard to the viral video of 02 (two) women paraded naked :*
— Manipur Police (@manipur_police) July 19, 2023
As regard to the viral video of 02 (two) women paraded naked by unknown armed miscreants on 4th May, 2023, a case of abduction, gangrape and murder etc
1/2
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி காவல்துறையினருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ''குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது'' எனத் தெரிவித்துள்ளார்.
The horrific video of sexual assault of 2 women emanating from Manipur is condemnable and downright inhuman. Spoke to CM @NBirenSingh ji who has informed me that investigation is currently underway & assured that no effort will be spared to bring perpetrators to justice.
— Smriti Z Irani (@smritiirani) July 19, 2023
''மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது'' என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.
मणिपुर से आ रही महिलाओं के खिलाफ यौन हिंसा की तस्वीरें दिल दहला देने वाली हैं। महिलाओं के साथ घटी इस भयावह हिंसा की घटना की जितनी निंदा की जाए कम है। समाज में हिंसा का सबसे ज्यादा दंश महिलाओं और बच्चों को झेलना पड़ता है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 19, 2023
हम सभी को मणिपुर में शांति के प्रयासों को आगे बढ़ाते हुए…


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்