மூத்தவர்களுக்கான உதைபந்தாட்ட தொடர் - மன்னார் soccermaster இரண்டாவது தடவையாகவும் சம்பியன்
ஐபிசி தமிழின் ஊடன அனுசரணையில் வடமாகாணரீதியான மாவட்ட மட்டத்தில் உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட சிரேஷ்ட வீரர்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவு அணிகளுக்கு இடையிலான அமரர் கலாநிதி மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஞாபகார்த்த இரு நாள் உதைபந்தாட்ட தொடர் மன்னாரில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட வீரர்களால் மிகவும் சிறப்பான முறையில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுத் தொடரில் வடமாகாணத்தில் இருந்து 10 க்கும் அதிகமான . District soccer master அணிகள் பங்கெடுத்தன.
இறுதியாட்டத்தில் மன்னார் A அணியும் மன்னார் B அணியும் மோதின ஆட்ட நேரமுடிவில் மன்னார் soccer master A அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சுற்றுதொடரின் கிண்ணத்தை தனதாக்கியது.
தொடரின் 3 ம் இடத்தினை வடமராட்சி soccer master அணியும், 4ம் இடத்தினை யாழ் soccer master அணியும் பெற்றுக்கொண்டன.