கனடாவில் மசாஜ் சிகிச்சையாளர் கைது: காவல்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை
கனடாவில் (Canada) மசாஜ் சிகிச்சையாளர் ஒருவர் பெண் சேவை பெறுநரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது கனடாவின் மில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 37 வயதான ஸ்டினடர்பால் சிங் கில் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தொம்சன் வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் வைத்து குறித்த நபர் பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் கோரிக்கை
இந்நிலையில், இந்த நபர் மேலும் பலரை தகாத முறைக்கு உட்படுத்தி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும்,குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து முறைப்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 21 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)