ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பு : இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஏமாற்றம்

Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam ITAK
By Sumithiran Nov 20, 2025 08:51 AM GMT
Report

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனான பேச்சுவார்த்தைகள் திறந்த நிலையில் இடம்பெற்ற போதும்,எவ்வித பலனும் அளிக்கவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

தாங்கள் எழுப்பிய பெரும்பாலான முக்கிய விடயங்களுக்கு ஜனாதிபதி “பார்ப்போம்” என்று மட்டுமே பதிலளித்தார் என அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியாக நின்ற தமிழரசு கட்சி

 புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், நீண்ட காலமாக தாமதப்படுத்தப்படும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் அண்மைய திருகோணமலை சம்பவம் ஆகியன குறித்து பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பு : இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஏமாற்றம் | Meeting With Anuraa Disappointing For Itak

அரசியல் தீர்வின் அவசியத்தை ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாகவும், சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழ் அரசுக் கட்சி அரசியல் தீர்வு குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது, அதன் முக்கிய கொள்கைகளில் சமரசம் செய்ய முடியாது என்பதை வலியுறுத்தியது.

பொறுப்புக்கூறல் விடயத்தில், அனைத்துலக பொறிமுறைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது, உள்நாட்டு செயல்முறையை ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியது.

எனினும், சர்வதேச ஈடுபாட்டை அரசாங்கம் அனுமதிக்க விரும்பாத நிலையில், தாங்கள் உறுதியளித்த உள்நாட்டு பொறிமுறை முன்னேற்றத்தில் இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

இருப்பினும் நாங்கள் அதை ஏற்கவில்லை என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் சட்டவிரோத விகாரைகள் : அநுரவிடம் தமிழரசு எடுத்துரைப்பு

வடக்கு, கிழக்கில் சட்டவிரோத விகாரைகள் : அநுரவிடம் தமிழரசு எடுத்துரைப்பு

எந்த உறுதியான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை

அவர் எந்த உறுதியான உறுதிமொழிகளையும் வழங்கவில்லை என்றும், “சிந்திப்போம், விவாதிப்போம், முயற்சிப்போம்” என்று மட்டுமே மீண்டும் மீண்டும் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பு : இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஏமாற்றம் | Meeting With Anuraa Disappointing For Itak

இதனால் இந்தச் சந்திப்பு எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

2026 ஜனவரியில், அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை தொடங்கும் – அல்லது முன்னேற்றம் ஏற்படும் என்பதுதான் ஜனாதிபதியின் ஒரே உறுதிமொழி என்றும் அவர் கூறினார். 

அரசியல் கைதிகள் விடுதலை : ஜனாதிபதியிடம் வலியுறுத்திய இலங்கை தமிழ் அரசுக்கட்சி

அரசியல் கைதிகள் விடுதலை : ஜனாதிபதியிடம் வலியுறுத்திய இலங்கை தமிழ் அரசுக்கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025