ஞானசார தேரருக்கு ஏற்பட்டுள்ள மனக்குமுறல் : அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக கவலை
Sri Lanka
Passport
Galagoda Aththe Gnanasara Thero
By Sumithiran
பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல, நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தின் ஊடாக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன
எனக்கு எதிராகப் பாரியளவில் அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டு, வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் உண்மைத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை பொதுபல சேனா அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி