வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய மனைவியை காணவில்லை : கணவர் விடுத்துள்ள அறிவிப்பு
வெளிநாடொன்றில் தொழில்புரிந்துவிட்டு, நாடு திரும்பிய தனது மனைவியை, ஒரு மாதமாக காணவில்லையென கணவர் தெரிவித்துள்ளார்.
சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) என்பரே காணாமற் போனவராவார்.
மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு
இது தொடர்பாக கணவன், மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த மாதம் (10/09/2025)மனைவி நாடு திரும்பிய நிலையிலும் இன்றுவரையிலும் வீட்டுக்கு வந்து சேரவில்லையென அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியை கடத்தியிருக்கலாம்
நாட்டின் பல பாகங்களில் தேடியும் மனைவி கிடைக்கவில்லை. எனினும், தன்னுடைய மனைவி, நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், வழங்கிய தகவல்களின் அடிப்படையில், பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் மஸ்கெலியாகாவல் நிலையத்துக்கு 052 2277222 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது 0753591052/0753435012 என்ற இலக்கங்களுக்கு அறிய தருமாறு கணவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
