விவசாய வங்கியில் பண மோசடி: சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்
Anuradhapura
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dhilak
மிஹிந்தலை விவசாயிகள் வங்கியில் இருந்து சுமார் 4 மில்லியன் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக விவசாயிகள் அமைப்பு ஒன்றின் செயலாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக நிறுவப்பட்டதாகக் கூறப்படும் ஒரு அமைப்பின் போலிக்காரணத்தின் கீழ் இந்த நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் ஒருவர் விவசாய சேவை பிராந்திய அதிகாரி மற்றும் மிஹிந்தலை விவசாயிகள் சேவைகள் அலுவலகத்துடன் தொடர்புடைய எழுதுவினைஞர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
முறைப்பாடு
அதன்படி, இந்த முறைப்பாடு உத்தியோகபூர்வமாக மிஹிந்தலை அபிவிருத்தி சபைக்கு எம்.கே. மிஹிந்தலை போகஹாய விவசாயிகள் அமைப்பின் செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்