தென்னிலங்கையில் பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் பலி
மாத்தளை (Matale)- பலாபத்வல, கிருலுகம பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பேருந்து ஒன்று மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (22) இடம்பெற்றுள்ளது.
வத்தேகவில் - அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, தம்புள்ளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து ஏற்படும் போது முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயது மகள் சச்சினி தாரக் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற மகனும் பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் படி, விபத்து தொடர்பில் மாத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 14 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)