இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான எதிர்க்கட்சி எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilleka) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (11) காலை அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க இவ்வாறு அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலை
இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில் அவர் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

அதற்கமைய இன்று காலை 9 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையானார்.
அங்கு அவர் சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |