வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்..!
ஐபிஎல் தொடரின் 46-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சர் ஓவரை நாலாபுறமும் விளாசினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ஓட்டங்கள் குவித்தது.
அதிக ஓட்டங்களை சேசிங் செய்த முதல் அணி
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன் அணியின் அணித்தலைவர் ரோகித் சர்மா டக் அவுட்டில் வெளியேறினார்.
அதனையடுத்து, நிதானமாக ஆடிய மும்பை அணி போக போக அதிரடியாக விளையாடி முதல் போட்டிக்கு பழிவாங்கும் விதமாக இந்த போட்டியை 18.5 ஓவரில் சேசிங் செய்தனர்.
இதனால் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
214 ஓட்டங்களை சேசிங் செய்ததன் மூலம் மொகாலியில் அதிக ஓட்டங்களை சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.
