தேரர் படுகொலை: கட்டுநாயக்கவில் சிக்கிய மூளையாக செயற்பட்ட யுவதி!
தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துபாயிலிருந்து வந்த 24 வயது பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த படுகொலையானது, 2022 ஆம் ஆண்டு கண்டி - வெட்டேவ பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையை அதே விகாரையில் இருந்த மற்றொரு தேரர் செய்ததாகவும், வெளிநாட்டில் வசித்து வந்த பெண் சந்தேக நபர் அதற்கு மூளையாக செயற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
மேலும் சீதுவ காவல்துறையினரின் விசாரணைகளைத் தொடர்ந்து, பெண் சந்தேக நபர் தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தேகநபரான பெண் நேற்றையதினம் (13) துபாயில் இருந்து திரும்பிய பின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, சீதுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடையைச் சேர்ந்த சந்தேக நபரான பெண், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்