திருகோணமலை - பேதிஸ்புர பகுதியில் மோதல் - ஒருவர் உயிரிழப்பு (படங்கள்)
Trincomalee
Sri Lanka Police Investigation
By Vanan
பேதிஸ்புர பகுதியில் மோதல்
திருகோணமலை - பேதிஸ்புர பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை(16) 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் மட்கோ - மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த பீ.பீ.பிரதீப்குமார (34வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் கால், கைகள் வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.
இச் சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி