திடீரென கோட்டாபயவை சந்தித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர்! காரணம் வெளியாகியது! (படங்கள்)
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராமாதிபதியுமான சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அரச தலைவர் கோட்டாபயவினை சந்தித்துள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது அவரினால் எழுதப்பட்ட 'ஜெனீவா தோல்வியின் எதிரொலி' எனும் நூலினையும் கையளித்துள்ளார்.
இச்சந்திப்பானது இன்று முற்பகல் அரச தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவா நகரைத் தளமாகக் கொண்டு இலங்கையின் இறையாண்மையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆய்வுக்குட்படுத்தியும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டும், ஆனந்த தேரரினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான குணபால திஸ்ஸகுட்டியாரச்சியினால் எழுதப்பட்ட “அரசியலின் மறைக்கப்பட்ட கதைகள்” நூலும் அரச தலைவரிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கொழும்பு ஹெவ்லொக் டவுன் சாம விஹாராதிபதி சங்கைக்குரிய அதபத்துகந்தே ஆனந்த தேரரும் கலந்துகொண்டிருந்தார்.