திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடும்பாவிகள் எரிப்பு!
முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் இன்று (20.11.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த முத்துநகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாய காணிகளும் குளங்களும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதன்படி, அவை இந்திய சூரியபடலத் திட்டத்தின் கீழாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் இதன்போது தெரிவித்தனர்.
காணி விடுவிப்பு
குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அங்கு காணப்படும் குளங்கள் புனரமைத்து தரப்படவேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ரொசான் அக்மீமன ஆகியோர் தம்மை ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதனால் அவர்களது கொடும்பாவிகளை தாம் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |