மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை! காவல்துறையினர் விசாரணை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kiruththikan
வெலிகமவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இவர் கடந்த ஜனவரி மாதம் விடுதியில் தங்க வந்தார் என்றும் இரவு உணவுக்குப் பிறகு அவர் முன்பதிவு செய்த அறைக்குச் சென்றதாகவும் விடுதியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மரணம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தலைமையக ஆய்வாளர் டி. எம். அபேசேகர தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி