நல்லூர் கந்தனின் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் இன்று
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்தோராம் நாள் இன்றாகும்.
இருபத்தோராம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (18) காலை 6.45 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் கஜவல்லி மஹாவல்லி உற்சவம் நடைபெறுகின்றது.
இதன்போது வசந்த மண்டப பூஜையுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலா வலம் வந்தார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று (18) காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் நடைபெறுவதுடன் மாலை வேல்விமானமும், 19ஆம் திகதி காலை தண்டாயுதபாணி உற்சவமும் மாலை ஒருமுகத் திருவிழாவும், 20ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள் IBC Tamil TV, LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

