நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா
Jaffna
Nallur Kandaswamy Kovil
Sri Lanka
By Kiruththikan
மகோற்சவம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இன்று காலை வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து 6.15 மணியளவில் முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார்.
இதேவேளை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத் தேரோட்டம் நேற்று காலை புதன்கிழமை இடம்பெற்றது.
இன்று திருவிழாவுக்காக இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்த்திருவிழாவை தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியேற்ற திருவிழாவும் இடம் பெறும்.























மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்