நல்லூர் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு (காணொளி)
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா கொடியிறக்கத்துடன் சற்றுமுன் நிறைவுபெற்றுள்ளது.
இன்று காலை, விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்று ஆலய தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
கொடியிறக்கம்
வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமானும், வெள்ளி எருது வாகனத்தில் சடேஸ்வரரும் வெளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி, தெய்வயானை ஆகியோரும் வீதி வலம் வந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்றையதினம் தேர்த்திருவிழா இடம்பெற்றதுடன், இன்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றுள்ளது.



