நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய புருனோவுக்கு விளக்கமறியல்
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புருனோ திவாகரவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யூடியூப் தளத்தை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்து
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
