ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு

Vladimir Putin World Russia
By Shalini Balachandran Mar 25, 2024 04:49 AM GMT
Report

ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டதுடன் உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் மற்றும் வெடிகுண்டு வீசியும் தாக்குதலை நடத்தியது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

மக்கள் அஞ்சலி

இதனால், உள்ளே இருந்த அனைவரும் அலறியடித்து ஓடியதுடன் இந்த தீ விபத்தில் இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு புகை அரங்கம் முழுவதும் பரவியது.

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு | National Flag Candle Tribute Putin Attack Russia

இதுபற்றி ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளதுடன் அவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் 182 பேர் காயமடைந்துள்ளதாகவும் 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதோடு பலரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்று மீண்டும் ஐந்தாவது முறையாக அதிபரான நிலையில் தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பதனால் உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகின்ற நிலையில் இந்த சூழலில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்

மொஸ்கோ தாக்குதலின் போது 15 வயது மாணவன் செய்த காரியம்: குவியும் பாராட்டுக்கள்

உக்ரைனுக்கு தப்பியோட்டம்

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.

இதனால் அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று(24) ஒரு நாள் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததுடன் இந்த தாக்குதல் பற்றி புடின் தெரிவிக்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்ததுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளதாக சுட்டிக்காட்டியள்ளார்.

ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடின் விடுத்த உத்தரவு | National Flag Candle Tribute Putin Attack Russia

அத்தோடு சந்தேகத்திற்குரிய நபர்கள் இரண்டு பேருக்கு எதிராக மாஸ்கோவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதுடன் இதில் தலேர்த்ஜான் பரோதேவிச் மிர்ஜோயேவ் மற்றும் சைதக்ரமி முரோதலி ரசாபலிஜுடா ஆகிய இரண்டு பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

இதில் மிர்ஜோயெவ் என்ற தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுவதோடு இதனால் மே 22 ஆம் திகதி வரை அவரை விசாரணைக்கு முந்தின காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

ரஷ்யாவை புரட்டிப் போட்ட சம்பவம்: கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட 28 சடலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024