அடுத்த 48 மணிநேரத்திற்கு கியூ.ஆர் முறைமையில் சிக்கல்
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Vanan
48 மணித்தியாலங்களுக்கு கியூ.ஆர் பதிவுகளை மேற்கொள்ள முடியாது
48 மணித்தியாலங்களுக்கு கியூ.ஆர் பதிவுகளை மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர கூறியுள்ளார். பு
திய பயனர்களுக்கு மாத்திரம் தேசிய எரிபொருள் அமைப்புக்கான கியூ.ஆர் பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
பதிவுசெய்த பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது
எனினும் ஏற்கனவே கியூ.ஆர் முறையில் பதிவுசெய்த பயனர்களுக்கு இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியாகிய அறிவிப்பு |