100 ரூபாவாக அதிகரிக்கப்போகும் தபால் முத்திரை
Colombo
National Post Day
Sri Lanka
By Sumithiran
தபால் முத்திரை ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பாக திறைசேரியின் அனுமதிக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.
15 ரூபாவாக இருந்த முத்திரையின் விலை
2022 வரை 15 ரூபாவாக இருந்த முத்திரையின் விலை தற்போது 50 ரூபாவாக உள்ளது.
தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தபால் திணைக்களத்திற்கு நீண்டகாலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாமை காரணமாக பாரிய ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதனை நிவர்த்தி செய்ய கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தபால் ஊழியர்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்