காவல்துறை உயர் பதவிகளில் மாற்றம் : வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்
உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு (Police Media) தெரிவித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் (National Police Commission) அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவு
அதற்கமைய, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட (Asanka Karawita), குற்றப் புலனாய்வு பிரிவு (CID) மற்றும் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு (FCID) ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு 12.02.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)