ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் புதிய மின்சாரக் கட்டணங்கள்..!

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Kiruththikan May 23, 2023 11:52 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஜூன் மாதம் 1ஆம் திகதி முன்வைக்கப்பட்ட உத்தேச கட்டணத் திருத்தம் தொடர்பான பதிலை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் கருத்து வெளியிட்டார்.

கட்டண திருத்தம்

ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் புதிய மின்சாரக் கட்டணங்கள்..! | New Electricity Tariffs Effective From 1St July

“இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30வது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17 வது பிரிவின் படி, கட்டண திருத்தத்தின் போது அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கேட்கப்பட வேண்டும்.

இதன்படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள 3 வீத கட்டணக் குறைப்பு முன்மொழிவு மற்றும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட மாற்றுத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கோரப்படுகின்றன.

ஆணைக்குழுவின் கட்டணத் திட்டம் ஜூன் மாதம் ஆம் திகதி அறிவிக்கப்படும். அன்று முதல் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.

கட்டண திருத்தம் குறித்து வாய்மொழியாக கருத்து தெரிவிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த கட்டண நிர்ணய செயற்பாட்டில் தீவிரமாக பங்கேற்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறோம். ஏனெனில் பலரின் நேர்மறையான ஆலோசனைகள் இறுதி கட்டண முறையில் சேர்க்கப்படலாம்”

அண்மையில் இடம்பெற்ற கட்டண அதிகரிப்பின் காரணமாக குறைந்தளவு மின்சாாரத்தை பாவித்த தரப்பினர் அதிகளவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த பெப்ரவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வின் போது, 90 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் ஏழை நுகர்வோர்களிடமிருந்து நியாயமற்ற முறையில் வசூலிக்கப்பட்டது. நியாயமான கட்டணம் வசூலிக்கும் மற்றும் கட்டுப்படியாகக்கூடிய அடிப்படையில் மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தின் விதிகளை மீறி இந்தப் பிரிவுகளில் கட்டணம் 150 சதவீதத்தில் இருந்து 250 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

1200 சதவீதம் அதிகரிப்பு

ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் புதிய மின்சாரக் கட்டணங்கள்..! | New Electricity Tariffs Effective From 1St July

இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தங்கள் காரணமாக, 30 அலகுகளுக்கு குறைவான நுகர்வு கொண்ட வகைகளுக்கான கட்டணமானது 1200 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் 5 ரூபாய்க்கு கொள்வனவு செய்த ஒரு அலகு 66 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. அரசாங்கத்தின் கணக்கெடுப்பின்படி, மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகமாகும்.

இந்தக் குழு மாதம் ஒன்றுக்கு 0 முதல் 30 அலகு வரை மின்சாரத்தைப் பயன்படுத்தியது. மின்சார நுகர்வு குறித்த புதிய தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரை மாதாந்தம் ஒரு அலகு கூட பயன்படுத்தாத மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை 436,000 ஆக அதிகரித்துள்ளது.

90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்திய சுமார் 6 லட்சம் நுகர்வோர், 60 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். மின் கட்டண உயர்வால் எரிசக்தி வறுமை அதிகரித்துள்ளதாக இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் கடந்த பெப்ரவரி மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிப்படையற்ற மின்சார கட்டண திருத்தத்தினால் அநியாயமாக பாதிக்கப்பட்ட வீட்டு மின் நுகர்வோர், மதவழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் 120 அலகுகளுக்குக்கு குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் இந்தக் கட்டணத் திருத்தத்தினால் நியாயமாக நடத்தப்பட வேண்டும்.

“வீட்டுமின் நுகர்வோர்களாகவுள்ள சுமார் 50 லட்சம் நுகர்வோர் முந்தய கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் முதலில் முன்மொழிந்திருந்த 35 சதவீத கட்டண உயர்வுக்குப் பதிலாக, 66 சதவீதமாக உயர்த்தப்பட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் கட்டண திருத்தத்தில் இந்த நுகர்வோர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுப்போம். மேலும், வழிபாட்டுத் தலங்களில் சலுகை விலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும். நாட்டிற்கு அந்நிய செலாவணியை உருவாக்கும் துறைகளிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

சுற்றுலாத் தொழில், ஏற்றுமதித் தொழில்கள் போன்றவற்றை நிலையாகப் பராமரிக்க, ஆற்றல் செலவுகளை முடிந்தவரை குறைக்க வேண்டும்." 

ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026