பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் புதிய ஆட்சேர்ப்புகள் இல்லை! வெளியாகிய அறிவிப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விற்பனை முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வைத்தியர் மயூர நெத்திகுமாரகே, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
மேலும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்,
ஊழியர் தேவை
“தற்போது பணிபுரிபவர்கள் தங்கள் வேலைகள் தொடர்பில் அச்சம் கொள்ளதேவையில்லை.
2012 ஆம் ஆண்டில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் சுமார் 3,290 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் இப்போது பல விடயங்களில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அப்போது முன்பு போல அதிகமானோர் எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் புதிய மனிதவளக் கட்டமைப்பின்படி, சுமார் 3,290 ஆக இருந்த மனிதவளம் 2,031 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய ஊழியர்களில் பலர் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் ஓய்வு பெறுவார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது, புதியவர்கள் வரமாட்டார்கள்.
புதிய ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பல திறமையற்ற சேவைகளை நாங்கள் நிறுத்திவிட்டோம். எனவே, இப்போது அந்த நபர்களுக்கான தேவை இல்லை. " என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

