பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் : வெளியான அறிவிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள்
இந்தநிலையில் குறித்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.mahapola.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |