சீனாவில் உருவான புதிய வகை வைரஸ்..!
சீனாவில் கொரோனா வைரஸ் போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிழக்கு சீனாவில் உள்ள மக்களுக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து சோதனை நடத்தியபோது இந்த வைரஸ் பற்றி வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம்
இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லங்கையா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டு வருதவதாக சீன வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
