பல்கலைக்கழக மாணவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை - காவல்துறையிடம் சிக்கிய பல்கலைக்கழக மாணவர்
மூன்றாம் இணைப்பு
கொழும்பு குதிரைப் பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநர் மேலதிக ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக கறுவாத்தோட்ட காவல்துறையினரிடம் கொலை செய்யப்பட்ட மாணவி 24 வயதான விஞ்ஞான பீடத்தில் 3 ஆம் ஆண்டில் பயின்றவர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகம – கிரவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலத்திற்கு அருகிலிருந்து பையொன்றும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி மற்றும் கண்காணிப்பு கருவி ஊடாக காவல்துறையினர் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கறுவாத்தோட்ட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு 7 இல் அமைந்துள்ள குதிரைப் பந்தயத் திடலில் 23 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 23 வயதுடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம்
இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் இந்த சடலம் தொடர்பில் களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.