அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்!

Jaffna SL Protest Eastern Province Northern Province of Sri Lanka
By Kalaimathy Apr 24, 2023 07:47 AM GMT
Report

நாளைய வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு எதிராக ஒருமித்து ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் எனவும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

பண்ணாகத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஒரு புதிய சட்டமூலம் மக்கள் மத்தியில் எதுவித அபிப்பிராய கோரலும் இடம்பெறாது. மேலும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம், 30 வருட காலமாக தமிழர்கள் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு மற்றும் யுத்தங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் எதேச்சதிகாரம்

அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்! | North East Protest Pta Ata Tamils Peoples Media

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்போது அதிகாரத்தில் இருந்த தமிழ் தலைமைகள் ஆதரித்தமையாலேயே தமிழர்கள் மிக மோசமான நிலையை அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது.

இன்று சர்வதேசமட்டத்திலும் சரி ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்ற ஒரு சட்டமே இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்ற நிலையில், மீளவும் சிறிலங்கா அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்ற போர்வையில் முயற்சிப்பது என்பது சர்வதேசத்தினுடைய பாரிய எதிர்ப்பினையும் சம்பாதிக்கின்ற ஒன்றாக காணப்படுகின்றது.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் அப்பாவி மக்கள் கைது செய்யப்படுகின்ற நிலையிலும் முப்படைகளினுடைய மேலாதிக்கம் இச்சட்டத்தின் மூலம் உயர்வடைந்து செல்வதனையும் நாங்கள் காணலாம்.

முப்படைகளின் மேலாதிக்கம்

அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்! | North East Protest Pta Ata Tamils Peoples Media

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அப்பால் ஊழல் மோசடிகள் குறித்து ஒரு ஒழுங்கான வலுவான சட்டம் வராத நிலையில் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தப்பித்துக் கொள்ளுகின்ற ஒரு நிலையைத்தான் இது தோற்றுவித்திருக்கின்றது.

இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நாங்கள் முற்றாகவே நிராகரித்திருக்கின்றோம். இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டிற்கு உகந்ததல்ல, அதே நேரம் சர்வதேசத்திற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

உருவக மாற்றங்கள் செய்து எந்த ஒரு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச் சட்ட போர்வையில் கொண்டு வந்தாலும் ஜனநாயக ரீதியாக போராடும் இந்த மக்களை அடக்குகின்ற ஒடுக்குகின்ற ஒரு சட்ட மூலமாக இது காணப்படுகின்றது என்ற அச்சம் பொதுமக்களுக்கு நிலவுகின்றது.

இந்த நிலையில் நாளைய தினம் வடகிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்தாலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகமாக நாங்கள் பூரண ஆதரவினை வழங்குகின்றோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு

அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்! | North East Protest Pta Ata Tamils Peoples Media

எங்களுடைய மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு இருக்கின்ற இந்த தருணத்திலே சிறிலங்கா அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்த அரசாங்கம், அதிகாரிகளை கட்டுப்படுத்துவதற்காகவும் ஆக்கிரமிப்பிற்காகவும் பாரிய நிதிகளை செலவழித்துக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய இந்த சைவ தலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்ற வேலையை இந்த அரசு திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழ்ச்சியான மதவாதங்களை தூண்டுகின்ற இந்த அரசினுடைய சூழ்ச்சியை நாங்கள் கண்டிக்கிறோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இவ்வாறான நிலையில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமித்துக் கொண்டும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற இந்த புதிய சட்டமூலத்தையும் திணிப்பதற்கு அரசு முயல்கிறது.

அனைத்து பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் அனைவரும் இந்த ஹர்தாலினை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016