அதிகாரப் பரவலாக்கல் - வடக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதா...! பொங்கியெழும் சரத் வீரசேகர
இலங்கையிலிருந்து வடக்குப் பகுதி அதிகாரப் பரவலாக்கல் ஊடாக பிரித்து வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ”வடக்கில் காணி உரித்து தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை
காணி உரித்துடையவர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது புதிய விடயமல்ல. தெற்கிலும் இவ்வாறு வர்த்தமானி வெளியிடப்பட்டு காணி உரித்துகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கில் இயங்கும் பிரிவினைவாதிகள் இனவாதத்துடன் செயற்படுகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றமையானது அதிகாரப் பரவாலாக்கல் ஊடாக வடக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
மேலும், தையிட்டி விகாரையில் இராணுவத்தினர் வழிபாடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகள் ஓரிருவர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமே இதற்குக் காரணமாகும்.
இராணுவத்தினர் தமது மத வழிபாடுகளில் ஈடுபடக் கூடிய சுதந்திரம் இருக்கிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக நாம் கடந்த காலங்களில் பாதுகாப்பு துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக நாடாளுமன்றத் தில் கலந்துரையாடியிருக்கிறோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவே செயற்படுகிறது என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
