திவாலாகும் கட்டத்தில் சிறிலங்கா! அடிக்கப்பட்ட அபாய மணி
அரசின் திறைசேரியில் 400 மில்லியன் டொலர் பணம் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் கடனாக பெற்ற 900 அமெரிக்க டொலர்களை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியானது குறுகிய காலத்திற்கான நெருக்கடி என இலங்கை மத்திய வங்கி அர்த்தப்படுத்தி வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் டொலர் தட்டுப்பாடு தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் நேற்று இலங்க மத்திய வங்கிக்கு சென்று, ஆளுநர் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய நாடு வங்குரோத்து அடைய கூடிய வகையில் இந்த பொருளாதார நெருக்கடி நீடித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் கடன் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்து, அவற்றை மறுசீரமைப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பான பொறுப்பு எதிர்க்கட்சிக்கும் இருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எமது கட்சியின் யோசனைகளை முன்வைத்தோம்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில், அரசியல் கட்சி பேதமின்றி நாங்கள் முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்தினால், அதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வுகாண வழியேற்படும் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.