உக்கிரமடையும் போராட்டகளம்!! 55 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
புதிய இணைப்பு
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரச தலைவரது மாளிகையிலும் அரச தலைவரது செயலகத்திலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 19 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பு - காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதற்கிடையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஆர்ப்பாட்டக் களத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.