யாழ். வடமராட்சி கிழக்கில் அதிரடியாக நபர் கைது..!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Dilakshan
யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 7.5 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி காவல்துறையினரிடம்ட ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(19/11) முன்னிலப்படுத்தப்பட்ட நிலையில் அவரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி