பட்ஜட் அமர்வில் முழுமையாக கலந்து கொண்ட மூன்றே மூன்று அரச தரப்பு எம்.பிக்கள்
Parliament of Sri Lanka
National People's Power - NPP
Budget 2025
By Sumithiran
கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் 21, 2025 வரை நடைபெற்ற 27 பட்ஜெட் தொடர்பான அமர்வுகளில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே 100% வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில், பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake), மற்றும் துணை சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ்(Rizvie Salih) ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏழு பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்
மீதமுள்ள ஏழு பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். முழுமையாக வருகை தந்த எம்.பி.க்கள் வருமாறு,
பிமல் ரத்நாயக்க, ஹரிணி அமரசூரிய, ரிஸ்வி சாலிஹ், டி.வி. சானக, தயாசிறி ஜெயசேகர, திலித் ஜெயவீர, கயந்த கருணாதிலக்க, ஹேஷா விதானகே, கே. சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரவி கருணாநாயக்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


10ம் ஆண்டு நினைவஞ்சலி