மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை

Donald Trump Sri Lanka India Iran Russia
By Dharu Mar 06, 2026 02:33 PM GMT
Report

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் இடையூறுகளை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா இந்தியாவுக்கு தற்காலிக சலுகை அளித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் (US Treasury Department) அறிவிப்புப்படி, மார்ச் 5, 2026 அன்று கடலில் ஏற்றப்பட்டு தேங்கியிருக்கும் ரஷ்ய எண்ணெய்இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் 30 நாள் தற்காலிக விலக்கு  வழங்கப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் 4, 2026 வரை செல்லுபடியாகும்.

அமெரிக்க பொருளாதார செயலாளர் ஸ்காட் பெசென்ட்  இதை "உலக எண்ணெய் சந்தையில் எண்ணெய் ஓட்டத்தை தொடர உதவும் தற்காலிக நடவடிக்கை என்று விவரித்துள்ளார்.

அமெரிக்காவின் முதல் அதிபயங்கர தாக்குதல்! ஈரானில் விழுந்த PrSM ஏவுகணைகள்

அமெரிக்காவின் முதல் அதிபயங்கர தாக்குதல்! ஈரானில் விழுந்த PrSM ஏவுகணைகள்

ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணைவழி  பாதிக்கப்பட்டு, உலகின் பெரும்பகுதி எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரஷ்யாவுக்கு கணிசமான நிதி பலன் அளிக்காது என்றும், ஏற்கனவே கடலில் உள்ள எண்ணெய் மட்டுமே இதில் அடங்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது இந்தியாவுக்கு சாதகமா

இது இந்தியாவுக்கு மிகவும் சாதகமானது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடு. அதன் சுமார் 50% எண்ணெய் இறக்குமதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை | Opportunity Us Given Ind In Middleeast Tension

தற்போதைய மத்திய கிழக்கு பதட்டங்கள் காரணமாக விநியோக தாமதம், விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த 30 நாள் விலக்கு மூலம் இந்திய சுத்திகரிப்பாளர்கள் (refiners) ரஷ்யாவின் தள்ளுபடி விலை எண்ணெயை விரைவாக பெற முடியும்.

இது உடனடி விநியோக அழுத்தத்தை குறைக்கும் மற்றும் எரிபொருள் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்த உதவும்.

இருப்பினும், இது நிரந்தர தீர்வு இல்லை. வெறும் தற்காலிக நடவடிக்கை மட்டுமே. எதிர்காலத்தில் அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

தஞ்சம்கோரிய ஈரான் போர்க்கப்பலுக்கு திருமலையில் கண்டம் வருமா.....

தஞ்சம்கோரிய ஈரான் போர்க்கப்பலுக்கு திருமலையில் கண்டம் வருமா.....

இலங்கைக்கு பயன் கிடைக்குமா

இலங்கைக்கு இதன் மூலம் மறைமுகமாக சில அளவு பயன் கிடைக்க வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை | Opportunity Us Given Ind In Middleeast Tension

இலங்கை தனது எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இந்தியாவிடமிருந்து (அல்லது இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக) பெறுகிறது.

இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகம் சீராக இருந்தால், இலங்கைக்கு எரிபொருள் விலை ஸ்திரத்தன்மை மற்றும் விநியோக உறுதிப்பாடு கிடைக்கும்.

ஆனால் நேரடி பயன் இல்லை. இந்த விலக்கு இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இலங்கை தனியாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு தனி அனுமதி தேவைப்படும்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு இதுபோன்ற தனி சலுகை அறிவிக்கப்படவில்லை.

மொத்தத்தில், மத்திய கிழக்கு பதட்டங்கள் உலக எண்ணெய் சந்தையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இந்த அமெரிக்க நடவடிக்கை இந்தியாவுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கும் மறைமுக நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

பிரித்தானியாவில் பத்து ஈரானிய உளவாளிகள் கைது!

பிரித்தானியாவில் பத்து ஈரானிய உளவாளிகள் கைது!

இந்திய எரிவாயு

இந்திய எரிவாயு ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஆகியவை ஏற்கனவே தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை | Opportunity Us Given Ind In Middleeast Tension

எண்ணெயைப் பொறுத்தவரை, இந்தியா அதன் 90% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதில் பாதி, அதாவது ஒரு நாளைக்கு 2.5 முதல் 2.7 மில்லியன் பீப்பாய்கள் வரை, ஹார்முஸ் வழியாக பயணிக்கிறது.

பெரும்பாலும் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து.

ஹார்முஸ்மூடல் காரணமாக ஏற்படும் விநியோக நெருக்கடி பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இந்தியாவின் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த விலக்கு அமலில் இருப்பதால், வணிக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டால், தண்ணீரில் மீதமுள்ள சுமார் 145 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்திய துறைமுகங்களுக்கு திருப்பி விடப்படலாம் என்று கெப்ளரின் முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிட்டோலியா  தெரிவித்துள்ளார்.

"இருப்பினும், இந்த விலக்கு மத்திய கிழக்கு விநியோக ஓட்டங்களுக்கான இந்தியாவின் கட்டமைப்பு வெளிப்பாட்டை அடிப்படையில் மாற்றாது" என்று அவர் மேலும் கூறினார்.

ரஷ்ய எண்ணெய்

இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் 20% என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை | Opportunity Us Given Ind In Middleeast Tension

இந்த விலக்கு இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான அமெரிக்க அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

சமீபத்தில், ட்ரம்ப் இந்தியா மீது 50% வரிகளை விதித்தார், அதில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு 25% வரியும் அடங்கும்.

இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இந்தியா எப்போதும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை ஆதரித்து வருகிறது, அதன் பரந்த மக்கள்தொகையின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதன் வர்த்தக பங்காளிகளுடன் வணிகம் செய்ய உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021