போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் போத்தல்கள் : நீதிமன்றின் உத்தரவு
போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் விதித்து அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே லேபிள்கள் கொண்ட 8,500 போத்தல்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, 19 லிட்டர், 5 லிட்டர், 1500, 1000 மற்றும் 500 மில்லிலிட்டர் அளவுகளில் போலி லேபிள்கள் கொண்ட பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை
அதன்படி, அந்த நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது பிரதிவாதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்ட 8,500-க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழு இருப்பையும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதன்படி, சம்பந்தப்பட்ட தண்ணீர் போத்தல்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அழிக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |