காடு போன்ற முடிவளர்ச்சிக்கு அதிரடி தீர்வு தரும் சிறந்த எண்ணெய்
Hair Growth
Beauty
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
- வெந்தய பொடி- 1 ஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் வெந்தய பொடி, விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.
- பின் அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை நன்கு தடவ வேண்டும்.
- அதன் பின் ஒரு துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அதை தலையில் சுற்றி, 15 நிமிடம் கட்ட வேண்டும்.
- இதற்கடுத்து ஒரு 30 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- இதனை, வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாக வளர தொடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி