தீவு நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெருந்தொகை உப்பு
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் (Srilanka) தீவில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதுடன் உப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.
15 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பரில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
உப்பின் மொத்த மதிப்பு
இந்நிலையில், உப்பு பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக மே 22 முதல் ஜூன் 7 வரையான காலப்பகுதியில் மொத்தமாக 18,163 மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு ரூ. 1,291 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை உப்பு இறக்குமதிக்காக ரூ. 571 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக 30,000 மெற்றிக்தொன் உப்பை இறக்குமதி செய்யத்திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
