'அரச ஊழியர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு' - வேலைத்திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிபரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இலங்கையில் அந்நிய செலாவணியை உயர்த்துதல் மற்றும் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான சிக்கல்களை நிவர்த்திப்பது குறித்து உரிய நிறுவனங்களுடன் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பான பொது நிர்வாக சுற்று சுற்றறிக்கையில் திருத்தத்தை மேற்கொள்ளுவது உள்ளிட்ட 6 விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நாணயம் அனுப்பல்

இதன்மூலம், வெளிநாட்டு நாணயத்தை அனுப்புவதற்கு, வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ், அரச சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி, வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டில் கல்வி கற்பதை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
நீக்கப்படவுள்ள தடை - அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு!