நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளித்த ரணில் - கோட்டாபய தரப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்ததில் சாதகமான முன்மொழிவுகள் எவையும் உள்ளடக்கப்படவில்லையென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையான சீர்திருத்தங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் காணப்படுதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள் பொய்த்தன
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மக்களின் கோரிக்கைகள் 22 ஆவது திருத்ததில் உள்ளடக்கப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக அரச தலைவரின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை பலப்படுத்துதல், ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பன அதில் உள்ளடக்கப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பேச்சுவார்தை திருப்தியளிக்கவில்லை
இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.