ரணிலின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்றம் வந்த புதிய உறுப்பினர்..! (நேரலை)
புதிய இணைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு சென்ற நிலையில் தற்போது அவர் சிறிலங்காவின் அதிபர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதால், குறித்த ஆசனம் வெற்றிடமாகியுள்ளது.
அவ் வெற்றிடத்திற்கு தற்பொழுது ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இன்றைய நாடாளுமனற்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இதுவாகும்.
இதேவேளை, இன்றைய நடராளுமன்ற அமர்வில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பதில் அதிபரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்பில் பிற்பகல் 4.30 வரை விவாதிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.