அளவெட்டியில் டீசலை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர் சிக்கினார்(படங்கள்)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
யாழ்ப்பாணம் அளவெட்டியில் டீசலை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவரை நேற்று மாலை தெல்லிப்பழை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளவெட்டி பகுதியில் உள்ள கடை ஒன்றில் டீசலை பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது 291 லீற்றர் டீசல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதோடு டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய கடை உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்