மக்களே அவதானம்! வீடு புகுந்து கைவரிசை காட்டும் திருட்டுக்கும்பல் (படங்கள்)
யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த திருட்டுக் கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்றுள்ளது.
கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்புக் கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்.
திருடிய போது தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்
இதேவேளை, வாழைச்சேனையில் திருடிய போது மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
வீட்டு முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை திருடன் ஒருவன் திருடும் போது வெளிச்சத்தை ஏற்படுத்த சிகரெட் லைட்டரை பயன்படுத்திய போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றியுள்ளதுடன், வீட்டின் கூரை மற்றும் கதவு, ஜன்னல்கலும் தீப்பற்றி எரிந்துள்ளன.
மோட்டார் சைக்கிள் தீப்பற்றிய போது அதனை திருடன் அனைப்பதற்காக தண்ணீர் என்று நினைத்து வாளியொன்றிலிருந்த பெயின்ட் பூசும் டின்னரை மோட்டார் சைக்கிளில் ஊற்றிய போது மோட்டார் சைக்கிள் வேகமாகத் தீப்பற்றியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
கூக்குரல் எழுப்பிய திருடன்
இவ்வாறு தீப்பற்றிய போது மோட்டார் சைக்கிள் எரிகிறது எழும்புங்கள் என்று கூக்குரல் ஒன்று கேட்டவுடன் தாம் எழுந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாதக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் தமது வாகனங்களையும், உடமைகளையும் அவதானமாக வைத்திருக்குமாறு மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.