தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு

IBC Tamil Trincomalee Baskaran Kandiah
By Sumithiran Mar 09, 2025 06:57 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஐபிசி தமிழ் ஊடக குழுமத்தின் முக்கிய ஊடகவியலாளர்,கவிஞர் பா.பிரியங்கனின் அகாலத்தின் குரல் எனும் கவிதை நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) மாலை 3.30 மணியளவில் திருகோணமலை சம்பூர் பண்பாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

சம்பூர் கலாமன்றம் மற்றும் தமிழ்த்தேசிய இலக்கியப்பேரவை இணைந்து வெளியிட்ட இந்த நிகழ்விற்கு ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர்களும் கவிஞர்கள் மற்றும் ஐபிசி ஊடக குழுமத்தின் நிறுவுனரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆசி வழங்கிய திருகோணமலை மறைமாவட்ட ஆயர்

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி நோயல் இமானுவல் ஆண்டகை அருள்விருந்தினராக் கலந்துகொண்டு ஆசிவழங்கியிருந்தார்.

தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு | Poetry Book Launch Held In Trincomalee

கவிஞர். க. யோகானநதம் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக கந்தையா பாஸ்கரன் (ஐபிசி ஊடக நிறுவனர்) , கிருபைராஜ் (சிரேஸ்ட விரிவுரையாளர்), இ.திருக்குமாரநாதன் ( மூத்த வழக்கறிஞர்), தீபச்செல்வன் (எழுத்தாளர்)ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தேசத்திற்காய் காவியமான அனைவருக்கும் காணிக்கை

போர்க்கால அனுபவங்களையும், வலிகளையும், இழப்புகளையும், தேசத்தின் போக்கையும், அதன்காப்பையும் தனது வீரியமான எழுத்தால் நிறைத்திருந்த எழுத்தாளரின் கன்னி வெளியீடாக இப்புத்தகத்தை தமக்கான சுதந்திர தேசம் ஒன்றை தந்துவிட வேண்டும் என்ற பெருங்கனவுக்காய் தங்கள் உயிர்களை தியாகம் செய்த அத்தனை உறவுகளுக்கும் காணிக்கையாக்கியிருந்தார் கவிஞர்.

தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு | Poetry Book Launch Held In Trincomalee

எதிர்பார்க்காத ஆற்றல் படைப்பு

முதன்மைவிருந்தினர் தனதுரையில் தனது ஊடகக் குழுமத்தில் பணியாற்றிய ஒரு சிறந்த படைப்பாளி பிரியங்கன் என்பதையும்,அவரிடம் இவ்வளவு எழுத்தாற்றலும்,வலியும் நிறைந்திருக்கும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை எனக்கூறியதுடன், தற்கால இளைஞனின் கவிதை வெளியீடு என்பது ஒரு காதல் கவிதை புத்தகமாக அமைந்திருக்கும் என தன் எதிர்பார்ப்பை பிரியங்கனின் எழுத்துப் புரட்டிப்போட்டது எனக் குறிப்பிடார்.

தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு | Poetry Book Launch Held In Trincomalee

2000 ஆம் ஆண்டு பிறந்த பிள்ளைகள் தமிழ்தேசியத் சிந்தனையுடன் படைப்புகளை வெளியிடுவது பெருமகிழ்வுக்கு உரியதும், எதிர்காலத்தில் எமது போராட்டவரலாறும் தியாகங்களும் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும் எனும் நம்பிக்கை திருப்தி அளிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒப்பற்ற போர்க்கால இலக்கியமாக, வலுவான ஆவணமாகப் பதிவாகின்றது எனவும் குறிப்பிட்டார்.

 போர்க்கால இலக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத இடம்

கவிஞர் கொட்டிஆரனின் அறிமுகவுரையும், தமிழ்தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் க. அலெக்சனின் வெளியீட்டுரையும் காத்திரமானதாக அமைந்திருந்தது.

தமிழர் தலைநகரில் சிறப்புற நடைபெற்ற ‘ அகாலத்தின் குரல்’ கவிதை நூல் வெளியீடு | Poetry Book Launch Held In Trincomalee

அ.சத்தியநாதனின் நயவுரை சபையினைக்கட்டிப்போட்டதுடன் நூலின் கனத்தினையும், காலத்தின் தேவையான கருத்துகளைச் சுமந்திருப்பதையும், போர்க்கால இலக்கியத்தில் ஒரு அசைக்கமுடியாத இடத்தை பிரியங்கனின் அகாலத்தின் குரல் பெற்றுள்ளது எனவும் நயந்தார்.




GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024