வவுனியாவில் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பபட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுநடவடிக்கை நேற்று(19) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு
குறித்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறைஉத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது கைது
இதனையடுத்து நேற்றையதினம் நெடுங்கேணி பகுதிக்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காவல்துறை உத்தியோகத்தர் இலஞ்சப்பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது அவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம்(20) வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டநிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |