புதிய கொவிட் விகாரங்களை கட்டுப்படுத்தும் சக்தி எம்மிடமுண்டு - சுகாதார அமைச்சர் பகிரங்கம்
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், எந்தவொரு புதிய விகாரமடைந்த கொரோனா வைரசையும் கட்டுப்படுத்தும் சுகாதார கட்டமைப்பை இலங்கை கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
ஆகையினால், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு எந்த வகையிலும் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று, பரவல் அடைந்துவரும் நிலையில், போதிய படுக்கை வசதிகள் மற்றும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த சுகாதார அமைச்சர், சில தரப்பினர் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ள போதிலும் எந்வொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறனை சுகாதார துறை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிறந்த மட்டத்தில் சுகாதாரக் கட்டமைப்பை செயற்படுத்த, முடியுமான திறன் காணப்படுவதாகவும், எந்தவொரு குறைபாடுகளும் இன்றி பொதுமக்களுக்கான சேவையை வழங்க முடியும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.