விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் : கொழும்பில் பரபரப்பு
நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, வரும் வாரங்களில் பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் காரணமாக வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து விசாரிக்க, அரச உளவு அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை விதிக்கப்பட்டவர்கள் கண்காணிப்பு
மேலும், மேற்கொள்ளப்படும் விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தவிர்த்து, பல்வேறு வழிகளில் இவர்கள் வெளிநாடு செல்லக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், இவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை சில அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, குற்றப் புலனாய்வுத் துறையும், இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையமும், பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை சமீபத்தில் எடுத்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |