பிரபாகரனை ராஜீவ்காந்தி மீது தீராப்பகை கொள்ள வைத்த இரண்டு முக்கிய சம்பவங்கள் (காணொளி)
விடுதலைப் புலிகள் எதற்காக இந்தியாவைப் பகைத்துக் கொண்டார்கள்?
எதற்காக அவர்கள் இந்தியா மீது விரோதம் கொண்டார்கள்?
இந்தியப் படைகளுடன் சண்டையிடும் முடிவுக்கு தலைவர் பிரபாகரன் எதற்காக வந்தார்?
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டதற்கும், இந்தியா மீது போர் தொடுத்ததற்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், புலிகள் இந்தியாவை தமது எதிரியாக ஆக்கிக்கொண்டதற்கு இந்தியா புலிகளுக்கு செய்த பல நம்பிக்கைத் துரோகங்களே காரணம் என்று சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
இந்திய அரசு மீது புலிகள் வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் நீக்கிவிடக் கூடியதாக இருந்ததும், இந்தியா மீது புலிகளை தீராப் பகைகொள்ள வைத்ததுமான இரண்டு சம்பவங்களை அவர்கள் சுட்டிக்காண்பிக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகள் - இந்திய உறவில் பாரிய விரிசல்கள் ஏற்படக் காரணமாக அமைந்த அந்த இரண்டு சம்பவங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: