வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...!

Anura Kumara Dissanayaka Parliament Election 2024 National People's Power - NPP
By Thulsi Nov 16, 2024 06:36 AM GMT
Report

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (National People's Power) ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் வடக்கு - கிழக்கில் மட்டக்களப்பு தவிர்த்த எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருப்பதும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை - எக்காளமிடும் சுமந்திரன்

மாபெரும் அறுதிப்பெரும்பாண்மை

மாபெரும் தேர்தல் வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற்ற பின்னர் இலங்கை கொண்டாட்டங்களின்றி மிகவும் அமைதியாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...! | President Adk Party Wins Majority In Parliament

அத்துடன் அநுரவின் கட்சிக்கு கிடைத்த மாபெரும் அறுதிப்பெரும்பாண்மை வெற்றி  அரசியல் ஆய்வாளர்களால் கணிக்க முடியாது போனதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"இந்தத் தேர்தல் குறித்து கருத்துக்களைத் தெரிவித்த எந்த அவதானியும் தேசிய மக்கள் சக்திக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்குமெனக் கருதவில்லை.

அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கலாம் அல்லது பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைப்பார் என்றுதான் கருதப்பட்டது. இது யாருமே எதிர்பார்க்காத வெற்றி என மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வளவு நாடாளுமன்ற ஆசனங்களை (159) எதிர்பார்க்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

பழைய அரசியல் முடிந்துவிட்டது. மக்கள் அந்த சகாப்தத்தை முடித்துவிட்டார்கள். பல்வேறு சலுகைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் இப்போது முடிந்துவிட்டது என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

ஹரிணியின் மைல் கல்லையும் கடந்த விஜித: மாயமான மகிந்தவின் சாதனை

வெற்றிக்கு காரணம்

அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான் என யாழ் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரலாற்றை மாற்றிய அநுரவின் திசைகாட்டியின் வெற்றிக்கு காரணம்...! | President Adk Party Wins Majority In Parliament

எதிர்க்கட்சிகள் சீர்குலைந்து போயுள்ளன, அவற்றால் தேசிய மக்கள் சக்திக்கு வலுவான போட்டியை கொடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் பின்னர் பழைய அரசியல்வாதிகளில் கடுமையான வெறுப்புணர்வு பொதுமக்கள் காணப்பட்டார்கள் என்றும் அது இந்த தேர்தலில் எதிரொலித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவர்கள் மக்கள் முன்செல்லவே பயந்தார்கள் என்றும் அவர்களில் பலர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு முன்பும் பின்பும் இலங்கை அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷஷிந்திர குமார ராஜபக்ஷ மட்டுமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025